×

டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்ற 275 வெளிநாட்டினர் கைது

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,032 ஆகவும், உயிரிழந்தோர் 58 ஆகவும் உயர்ந்துள்ளது.  இந்நிலையில், டெல்லி மாநாட்டின் தலைவர், தான் தனிமையில் இருப்பதாகவும், அரசாங்க உத்தரவுகளை பின்பற்றும்படியும், ஆடியோ ஒன்றை வெளியிட்டார். இதனிடையே, டெல்லி போலீசார், சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் மாநாட்டில் பங்கேற்ற 275 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

 இதற்கிடையே, 23 வெளிநாட்டினரை மறைத்து வைத்திருந்த  மதக்குருக்கள் சிலர் மீது லக்னோ போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 960 வெளிநாட்டினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

Tags : foreigners ,Delhi , Delhi show, aliens, arrested
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...