டெல்லி: இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று சமூக பரவல் நிலையை எட்டவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 20 இடங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ள 22 இடங்களையும் மத்திய அரசு கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.