×

கொரடாச்சேரி அருகே 15 ஆண்டுகளாக கற்கள் பெயர்ந்து சேதமடைந்த இணைப்பு சாலை-இரவு நேரத்தில் மின் வசதியும் இல்லாததால் மக்கள் அவதி

*இது உங்க ஏரியாநீடாமங்கலம் : கொரடாச்சேரி அருகில் உள்ள அரசமங்கலம், லிங்கதிடலிலிருத்து அன்பிற்குடையான் வரை சென்று நீடாமங்கலம் செல்லும் சாலையில் இணையும் சாலை முற்றிலும் சேதடைந்தும், இரவு நேரங்களில் மின் வசதியும் இன்றி கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கொரடாச்சேரி ஒன்றியம் அரசமங்கலம், லிங்கதிடலிலிருந்து சுமார் 3 கி.மீ. நீளம் வரை சென்று அன்பிற்குடையான், பயித்தஞ்சேரி கிராமங்களுக்கு இடையில் நீடாமங்கலம் செல்லும் சாலையில் இணையும் முக்கிய சாலையாக உள்ளது.இந்த சாலையில் கப்பலுடையான், அஸ்கான் ஓடை, அரசமங்கலம், அன்பிற்குடையான், பயித்தஞ்சேரி உள்ளிட்ட பல கிராமங்களிலிருந்து குறுக்கு வழியில் இந்த சாலையில் தான் பள்ளி, கல்லூரி மாணவிகள், பொதுமக்கள், விவசாயிகள் தினந்தோறும் சென்று வருகின்றனர்.இந்த சாலை கொரடாச்சேரி ஒன்றியம் அரசமங்கலம், லிங்கதிடல் வழியாக சுமார் 2 கி.மீட்டரும், வலங்கைமான் ஒன்றியம் அன்பிற்குடையான் பகுதியிலிருந்து ஒரு கி.மீ உள்ளிட்ட 3 கி.மீ. வரை கப்பி சாலை மண் சாலையாகவும், பல இடங்களில் கப்பிகள் பெயர்ந்தும், இரவு நேரங்களில் மின் வசதி இல்லாமல் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் மோசமான சாலையாக உள்ளது.எனவே சம்மந்தப்பட்ட கொரடாச்சேரி, வலங்கைமான் ஒன்றிய அதிகாரிகள் இணைந்து சம்மந்தப்பட்ட சாலையை பார்வையிட்டு நடவடிக்கை எடுத்து விரைவில் சாலையை சீரமைக்க வேண்டும் என்றனர்….

The post கொரடாச்சேரி அருகே 15 ஆண்டுகளாக கற்கள் பெயர்ந்து சேதமடைந்த இணைப்பு சாலை-இரவு நேரத்தில் மின் வசதியும் இல்லாததால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Koradacherry ,Needamangalam ,Arasamangalam ,Lingathidalil ,Anbudaiyan ,Dinakaran ,
× RELATED செட்டிசிமிழி கிராமத்தில் காஸ்...