×

கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டம்

திருவள்ளுர்: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சிமொழி, கலைபண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் தலைமையில், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அமைச்சர்கள்  சுகாதார மாவட்ட 24 மணி நேர அவசர கட்டுப்பாடு அறையினை நேரில் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தனர். அரசு அலுவலக வளாகத்தில் கிருமிநாசினிகளை அமைச்சர் பா.பெஞ்சமின் தெளித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் எம்எல்ஏக்கள் பி.பரலாமன், பி.எம்.நரசிம்மன், வி.அலெக்சாண்டர், கே.எஸ்.விஜயகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, திட்ட இயக்குநர்கள் க.லோகநாயகி, வை.ஜெயக்குமார்,  அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி வத்சவ்,  ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர்  இளங்கோவன்   உட்பட பல்வேறு துறை உயர் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags : Corona Prevention Lab ,Corona , Prevention , Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...