சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் எந்த தடங்கலும் இன்றி நடைபெறும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உறுதி அளித்துள்ளது. வழக்கமாக நாளென்றுக்கு 80 ஆயிரம் பேர் சிலிண்டர் கோரி பதிவு செய்வார்கள். தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் 1,30,000 ஆயிரம் பேர் சிலிண்டர் பதிவு செய்துள்ளனர். மேலும் பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும் என ஐ.ஓ.சி. தகவல் தெரிவித்துள்ளது.