சென்னை: தமிழகத்தில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது என சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். வெளிநாட்டில் இருந்து தமிழ்நாடு வந்துள்ள 12,519 பேர் 26 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என கூறினார். தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் வெளியே சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.