×

பரவும் கொரோனா... பதைபதைப்பில் மக்கள்... இரண்டாவது கட்டத்தில் கொரோனா உடலில் முதலில் எங்கு படிகிறது? பொது மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் தகவல்

சென்னை: கொரோனா வைரஸ் உடம்பில் நுரையீரல் பகுதியில்தான் முதலில் மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று பொது மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் பூபதி கூறினார். இதுகுறித்து, பொது மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பூபதி ஜான் கூறியதாவது:

*  இந்தியாவில் கொரோனா தாக்குதலின் 3வது கட்டம் எவ்வாறு இருக்கும்?
3வது கட்டம் என்பது சமூகம் மூலமாக பரவுவது. இதை அடைய குறைந்தது 2 வாரமாவது ஆகும். இத்தாலியை பொறுத்தவரை கடந்த 4 வாரம் நோய் தொற்று 260 வரையில் தான் இருந்தது. 5வது வாரத்தை தொடும் 22 ஆயிரத்தை தாண்டியது. இந்த மாற்றம் மிகப்பெரியது.

* தனிமைப்படுத்துதல் எந்த அளவிற்கு சாத்தியம்?
இத்தாலி மற்றும் லண்டனில் மக்கள் தங்களை தனிமைப்படுத்தாமல், பொது இடங்களில் கூடியது தான் கொரோனா பரவல் அதிகரித்ததற்கு முக்கிய காரணம். ஆனால், இந்தியா இந்த நிலைமைக்கு இன்னும் செல்லவில்லை. ஆனால், கட்டுப்பாடு இல்லாவிட்டால் இன்னும் ஓரிரு வாரங்களில் அந்த நிலைமையை அடைந்துவிடும். இந்தசூழலில் நாம் தனிமை படுத்திக்கொள்வதால் மட்டுமே இதை தடுக்க முடியும்.

* இச்சூழலில் எந்த திட்டம் சிறந்தது?
நமது குறிக்கோள் அடுத்தவர்களுக்கு நோய் வராமல் தடுப்பது மட்டுமே. யாருக்கெல்லாம் அறிகுறி உள்ளதோ அவர்கள் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். நமது நாடு வளர்ந்து வரும் நாடு. வளர்ந்த நாடுகள் கொரோனா வைரசை எதிர்கொள்ள முடியாமல் தவிர்த்து வருகிறார்கள். இந்த சூழலில் இதை கட்டுப்படுத்த வருமுன் காப்போம் திட்டம் மட்டுமே சரியாக இருக்கும்.

* எவ்வளவு நாள் தனியாக இருக்க வேண்டும்?
தற்போது நாம் எடுத்துள்ள 14 மணி நேரம் தனிமை என்பது முதல் அடி மட்டுமே. கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க நாம் இன்னும் நிறைய அடிகளை எடுத்துவைக்க வேண்டி உள்ளது. இன்னும் 2 வாரமாவது நம்மை தனிமைப்படுத்திக்கொண்டால் மட்டுமே நாம் இதை தடுக்க முடியும். இதனால், வரக்கூடிய இழப்புகளை நாம் தாங்கிக்கொள்ள வேண்டும். எனவே, தமிழக அரசு கூடுதலாக 2 வாரம் என்பதை அறிவிக்க வேண்டும். 2 வாரம் தனிமைப்படுத்துதல் என்பதை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

* நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு கொரோனா வராதா?
எனக்கு எதுவும் வராது என்ற கருத்தை அனைவரும் தவிர்க்க வேண்டும். தற்போது உள்ள சூழலில் மிகவும் பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். கொரோனா குறித்து உண்மையான விழிப்புணர்வை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

* கொரோனாவை தடுக்க என்ன மாதிரியான உணவுகளை எடுக்கலாம்?
உணவு வகைகளை பொறுத்தவரையில் தற்போது தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவு வகைகளை மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, 1 பெரிய நெல்லிக்காய், எலுமிச்சை பழம் 3 சொட்டு, 3 சிட்டிகை மஞ்சல் தூள், சிறிது கருஞ்சீரகம், சிறிது இஞ்சி ஆகியவற்றை அறைத்து ஜூஸ் போட்டு அருந்தலாம். இது நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. இதேபோல், வைட்டமின்-சி சம்பந்தப்பட்ட உணவு வகைகள் மற்றும் ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.  

* மஞ்சள், வேப்பிலை கலந்த நீர் நோய் பரவலை தடுக்குமா?
இவை இரண்டும் கிருமியை எதிர்க்க கூடிய தன்மை கொண்டவை. சூடான தண்ணீரில் வேப்பிலையை மிதக்க விட்டால் அது நோய் எதிர்ப்பு கொண்ட தண்ணீராக மாறும். ஆனால், குறிப்பாக இதை மட்டுமே பயன்படுத்தினால் நோயை எதிர்த்துவிடலாம் என்று கிடையாது. இதோடு இணைந்து சோப்பு, சானிடைசர் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கையை கழுவ வேண்டும்.

* உடலில் வைரஸ்
முதலில் எங்கு படிகிறது?
கைகளில் உள்ள வைரஸ் கிருமிகள் மூக்கு, கண், காது உள்ளிட்டவைகள் வழியாக உடம்புக்குள் செல்லும் போது முதலில் தொண்டையில் தான் தங்குகிறது. பின்னர்,  தொண்டையில் உள்ள வைரஸ் மெல்ல, மெல்ல கீழ் இறங்கி நுரையீரலில் படிகிறது. இதனால், நுரையில் பாதிக்கப்படுகிறது. இதற்கு தற்காப்பு முறையாக, சூடான தண்ணீரில் உப்பை போட்டு அதை கொப்பளித்து துப்ப வேண்டும். அடிக்கடி இப்படி செய்வதன் மூலம் தொண்டை பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும் வைரஸ் கிருமிகள் வெளியே சென்றுவிடும். இதனால், வைரசின் எண்ணிக்கையை குறைக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் இதை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.

Tags : Corona ,General , Corona, corona virus
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...