×

கொரோனா பாதிப்பு எதிரொலி: சான்றிதழ் பதிவேற்ற காலம் ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு:  இளநிலை அறிவியல் அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் பதவிகளுக்கான இரண்டாவது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்காக 23ம் தேதி (நேற்று) முதல் வருகிற 30ம் தேதி வரை தகுதி பெற்ற தேர்வர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அறிவிப்பு வெளியிட்டிருந்தது. சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள இசேவை மையங்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக மூடப்பட்டு உள்ளதாலும், தேர்வர்கள் மாவட்ட இசேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் அவர்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகக்கூடும் என்பதாலும், மேற்படி சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய காலக்கட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.




Tags : Corona Impact Echo , Corona, Certificate Upload, DNBSC
× RELATED கொரோனா தாக்கம் எதிரொலி!: ஏப்.24 முதல் 30ம்...