×

ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து நாளை நள்ளிரவு 12 மணி முதல் ரயில்கள் ரத்து

சென்னை:  தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதில், 21ம் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணி முதல் 22ம் தேதி இரவு 10 மணி வரை இயக்கப்பட இருந்த பயணிகள் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், விரைவு மற்றும் இன்டர்சிட்டி ரயில்கள் 22ம் தேதி காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் இயங்கும் புறநகர் ரயில் சேவையை குறைத்துவிட்டு, தேவைக்கு மட்டும் இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பான அறிவிப்புகள் இன்று அறிவிக்கப்படும்.


Tags : curfew, Trains ,canceled,tomorrow
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...