டெல்லி: மத்திய அரசு ஊழியர்களில் பாதிபேர் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் பி.மற்றும் சி பிரிவு ஊழியர்களில் பாதிபேர் மட்டும் தினமும் அலுவலகத்துக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய பணியாளர்கள் அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.