சிவகங்கை: சிவகங்கையில் சி.ஏ.ஏ-வை எதிர்த்து அரண்மனை தெப்பக்குளத்தில் இறங்கி இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தெப்பக்குளத்தின் நடுவே தேசியக் கொடிகளை ஏந்தியபடி மத்திய, மாநில அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களை தடுத்து நிறுத்தி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.