டெல்லி: மதிய உணவு திட்டத்தின் தரம் தொடர்பாக பதிலளிக்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதிய உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவுகளில் தரம் இல்லை என்ற புகாரை அடுத்து தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.