சென்னை: பேராசிரியர் தமக்கு வழிகாட்டி மட்டுமல்ல எல்லாமுமாக இருந்தார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞரை இழந்தபோது எப்படி துயரப்பட்டோமோ அந்த நிலையில்தான் இப்போதும் இருக்கிறோம். போராசிரியர் அன்பழகனின் இழப்பை தம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் அன்பழகன் படத்திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.