×

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வங்கி கணக்கில் பணத்தை திரும்ப பெற்ற முஸ்லிம்கள்

மணமேல்குடி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அம்மாபட்டினத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து ஒரே நாளில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தங்கள் கணக்கில் இருந்த பணத்தை எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டதுடன் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முமுவதும் தொடர் போராட்டங்களும், ஆா்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

தொடர்ந்து 24 மணி நேரமும் கண்டன கோஷங்களும், ஆர்ப்பாட்டங்களும், கண்டன உரைகளும் நடைபெற்று வருகின்றன. எத்தனை தொடர்ந்து நேற்று மணமேல்குடி அருகே அம்மாபட்டினம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து ஒரே நாளில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தங்கள் கணக்கில் இருந்த பணத்தை எடுத்ததால் பரபரப்பும், ஊழியர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Muslims ,CAA , Oppose the Citizenship Amendment Act Money in the bank account Returned Muslims
× RELATED மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை...