×

அவசியமற்ற வெளிநாடு பயணங்கள், பெரிய அளவில் கூட்டம் கூடும் இடங்களை பொதுமக்கள் தவிர்க்க வே்ணடும் : பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: கொரோனா வைரஸ் அச்சறுத்தல் காரணமாக மத்திய அமைச்சர்கள் வெளிநாடு செல்ல வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டு மக்களும் அவசியமின்றி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பெரிய அளவில் கூட்டம் கூடும் இடங்களை பொதுமக்கள் தவிர்க்க வே்ணடும் என கூறியுள்ள அவர், கொரோனா வைரஸ் குறித்து பதற்றம் தேவையில்லை, முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் 73 ஆக உயர்வு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் நாளுக்கு நாள் தாக்கம் அதிகரித்து வருகிறது.இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 73 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் மட்டும் 17 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதிசெய்யப்ட்டது. இந்திய அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு பல்வேறு அறிபுறுத்தலையும் வழங்கி வருகின்றது.

பிரதமர் மோடி ட்வீட்

இது குறித்து பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில்,கொரோனா குறித்த பயத்திற்கு NO சொல்லுங்கள் , முன்னெச்சரிக்கைக்கு YES சொல்லுங்கள்.மத்திய அமைச்சர்கள் வெளிநாடு செல்ல வேண்டாம். பொதுமக்கள் தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும். பெருமளவில் ஓன்று கூடுவதை தவிர்த்தாலே கொரோனா பரவுவதை கட்டுக்குள் கொண்டுவர முடியும்,என ட்வீட் செய்துள்ளார்.


Tags : public ,Modi ,trips , PM Modi, Corona, Virus
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு: எஸ்ஐடி விசாரணை கோரி வழக்கு