ராஜஸ்தான்: பல்லடம் வங்கிக்கொள்ளை தொடர்பாக ராஜஸ்தானில் மேலும் ஒரு கொள்ளையன் இசார்கான் கைது செய்யப்பட்டுள்ளான். கடந்த மாதம் 23ம் தேதி பல்லடம் அடுத்த கள்ளிபாளையத்தில் உள்ள வங்கியில் நகை மற்றும் பணம் கொள்ளை போனது. வங்கிக்கொள்ளை தொடர்பாக கடந்த வாரம் அனில் சிங் என்பவர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.