சென்னை: ஐபிஎல் போட்டிகளின் போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய பிசிசிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சத்தால், பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை மார்ச் 29 முதல் மே 24 வரை அனுமதிக்கக்கூடாது என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.