சென்னை: சென்னை மண்ணடியில் சிஏஏ-க்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். மண்ணடி போராட்டக் களத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்தத்து எதிராக திமுக வாக்களித்தது. மாநிலங்களவையில் அதிமுக ஆதரவுடன் குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேறியது. அதிமுக சிஏஏவை எதிர்த்து வாக்களித்திருந்தால் சட்டம் நிறைவேறி இருக்காது எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.