சென்னை : சிஏஏ எதிர்ப்பு, ஆதரவு போராட்டங்களில் தமிழகத்தில் இதுவரை சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏதும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்கள், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை காவல்துறை வழங்கி வருகிறது என்றும் போராட்டக்காரர்களிடம் அமைதியாக கலைந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறது என்றும் சிஏஏ போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரக்கோரிய வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதே சமயம் சென்னையில் மட்டும் சட்டவிரோதமாக போராட்டம் நடத்தியதாக 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுகிறது என மனுதாரர் கண்ணன் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.இதையடுத்து வழக்கு 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.