டெல்லி : காங்கிரசின் இன்றைய நிலையை கண்டு நான் வருத்தம் அடைவதாகவும் காங்கிரசால் இனி மக்களுக்கு சேவை செய்ய முடியாது என்றும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரசில் இளம் தலைமுறைக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லை என்று குற்றம் சாட்டிய சிந்தியா,காங்கிரஸ் கட்சி உண்மையை உணர மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.முன்னதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் ஜோதிர் ஆதித்ய சிந்தியா.ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதனிடையே சிந்தியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.