×

ஜோதிர் ஆதித்ய சிந்தியா இன்று தனது குடும்பத்துடன் இணைந்துவிட்டார் : பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மகிழ்ச்சி

டெல்லி : பாஜகவில் இணைந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை வரவேற்பதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.ஜோதிர் ஆதித்ய சிந்தியா இன்று தனது குடும்பத்துடன் இணைந்துவிட்டார் என்றும் பாஜக மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக சிந்தியா உழைப்பார் என்றும் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
முன்னதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் ஜோதிர் ஆதித்ய சிந்தியா.ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார் ஜே.பி.நட்டா. இதனிடையே சிந்தியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : JP Nata ,Jyotir ,Aditya Scindia ,BJP , Madhya Pradesh, Jyotir Aditya Scindia, Congress, Venugopal, Resignation, BJP
× RELATED சாதி, மதம் என்றிருந்த அரசியல் பாணியை...