திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலர் இசக்கிமீனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உதவி ஆய்வாளர் சகுந்தலா திட்டியதால் மனமுடைந்து காவல்நிலையத்தின் மாடியில் இருந்து கீழே குதித்ததாக தகவல் வெளியானது. படுகாயமடைந்த காவலர் இசக்கி மீனா சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.