×

திருச்செந்தூரில் இன்று மாசித் தேரோட்டம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் இன்று (8ம் தேதி) தேரோட்ட வைபவம் வெகு விமரிசையாக நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் திரளாகக் குவிந்துள்ளனர். நாளை இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மாசித் திருவிழா கடந்த பிப்.28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் சுவாமி சண்முகர், பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி கோயிலை வந்தடைந்தார். நேற்று காலை சுவாமி குமரவிடங்கப்பெருமான் மற்றும் அலைவாயு கந்த பெருமான் தனித்தனி வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாரிவேட்டைக்குச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. 9ம் நாளான நேற்று காலை 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேலக்கோயிலை சேர்ந்தனர்.

இரவு 8 மணிக்கு  சிவன் கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் எழுந்தருளி 9ம் திருவிழா மண்டபத்தை வந்துசேர்ந்ததும் பல்வேறு அபிஷேக  அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதையடுத்து சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்தனர்.  இன்று காலை தேரோட்ட வைபவம் நடக்கிறது. முதலில் காலை 6.30 மணிக்கு மேல் விநாயகர் தேரோட்டம் நடைபெறும். இதைத்தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதிகளில் பவனி வருகின்றனர். 11ம் திருநாளான நாளை (9ம் தேதி) இரவு தெப்ப உற்சவம் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags : Massit Theriotum ,Thiruchendur ,Tiruchendur , Tiruchendur
× RELATED திருச்செந்தூர் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் துவங்கிய மக்கள்