திருவாரூர்: விவசாயிகள் சங்கம் நடத்தும் பாராட்டு விழாவுக்கு வருகை தரும் முதல்வர் பழனிசாமிக்கு ஒருதரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மன்னார்குடி அருகே உள்ள கோட்டூரில் கறுப்புக்கொடி ஏந்தி முதல்வருக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயத்தை பாதிக்கும் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகளை மூட வேண்டும் என முதல்வருக்கு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.