×

டியூஷன் படிக்க வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு பொது மக்கள் செருப்படி : தெலங்கானாவில் பரபரப்பு

ஹைதரபாத் : தெலங்கானாவில் வீட்டுப்பாடம் எடுப்பதாக கூறி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியரை பொது மக்கள் செருப்பால் அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் வணர்ப்பத்தி மாவட்டத்தில் கோபால்பேட்டாவைச் சேர்ந்த சரத், தனியார் பள்ளியில்,ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே போல 5ம் வகுப்புக்கு உட்பட்ட மாணவர்களுக்கு வீட்டில் டியூஷன் எடுத்தும் வந்துள்ளார்.

வீட்டில் தினமும் குடிபோதையில் இருக்கும் ஷரத், டியூஷன் வரும் சிறுமிகளுக்கு பாடம் நடத்துவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆசிரியரின் அத்துமீறலை தாக்குப்பிடிக்க முடியாமல், சிறுமிகள் தங்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமிகளின் பெற்றோர்கள்,சரத்தை பிடித்து செருப்பால் அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.ஆசிரியர் சரத் மீது வழக்குப்பதிவு செய்துள்ள தெலுங்கானா போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் செருப்பால் அடித்து போலீசில் ஒப்படைத்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. .


Tags : Teenage girls ,harasser ,Teacher ,Telangana ,Telangana Teenage Girls Sexual Harassment , Telangana, sandals, little girls, sex, drinking, teacher, harassment
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...