×

சென்னை அண்ணா சாலை குண்டு வீச்சு வழக்கில் தேடப்பட்ட 4 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்

சென்னை: சென்னை அண்ணா சாலை குண்டுவீச்சு வழக்கில் தேடப்பட்ட 4 பேர், மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சென்னையின் மையப்பகுதியான அண்ணாசாலையில் அமெரிக்க துணை தூதரகம் மற்றும் போலீஸ் நிலையம் அருகே பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், கடந்த 3ம் தேதி பட்டப்பகலில் கார் மீது 2 வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குண்டு வீசியவர்களை தேடிவந்தனர். இவ்வழக்கில் போலீசால் தேடப்பட்ட தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கமருதீன் (30), ராஜசேகர் (28), பிரசாந்த் (25), ஜான் (எ) ஜான்சன் (35) ஆகியோர் மதுரை ஜேஎம் 6 நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். சரணடைந்த 4 பேரையும் மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கும்படி மாஜிஸ்திரேட் முத்துராமன் உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Tags : Anna ,Chennai , Chennai, Anna Road, Bombing Case, 4 persons, Madurai Court, Saran
× RELATED சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக...