×

பால் முகவரை தாக்கி செல்போன் பறிப்பு

சென்னை: நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். பால் முகவரான இவர், ேநற்று முன்தினம் இரவு நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 3 பேர், முகவரி கேட்பது போல் நடித்து, அவரது செல்போனை பறிக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட சுப்பிரமணியன் செல்போனை விடாமல் பிடித்துக்கொண்டு, அலறி கூச்சலிட்டார்.  இதனால், ஆத்திரமடைந்த 3 ஆசாமிகள், சுப்பிரமணியனை சரமாரி தாக்கி, அவரிடம் இருந்து 21 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து சுப்பிரமணியன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்:
செங்குன்றம் பகுதியை சேர்ந்த மதன்ராஜ் (25) என்பவர், நேற்று அதிகாலை அசோக் நகர் 100 அடி சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், மதன்ராஜ் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து மதன்ராஜ் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.



Tags : Women's Day ,Free Medical Camp ,Metro Railway Stations , Women,Metro Railway Stations, Free Medical Camp
× RELATED ரோகிணி கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்