சென்னை: கேங்மேன் (பயிற்சி)பதவிக்கான எழுத்துதேர்வு வரும் 15ம் தேதி நடக்கிறது என தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் அறிவிக்கை எண் 1/2019 நாள் அறிவிக்கப்பட்ட 5000 கேங்மேன் (பயிற்சி) பதவிக்கு விண்ணப்பித்து உடல்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துதேர்வு, 15.3.2020 அன்று நடைபெறும். உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்து தேர்வுக்கான நுழைவு சீட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். மேலும் www.tangedco.gov.in இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்’ எனக்கூறப்பட்டுள்ளது.