×

திருப்புத்தூர் அருகே சோகம் மஞ்சுவிரட்டு காளை கிணற்றில் விழுந்து பலி

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே மஞ்சுவிரட்டு காளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே வேலங்குடி கருப்பர் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகள் ஆங்காங்கே வயல் மற்றும் கண்மாய் பகுதிகளில் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன.

இவற்றை ஏராளமான மாடுபிடிவீரர்கள் பிடித்தனர். மஞ்சுவிரட்டின்போது இரண்டு காளைகள் இடையே திடீரென சண்டை ஏற்பட்டது. சண்டையிட்டுக் கொண்டே அருகில் இருந்த தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்தன. முதலில் ஒரு காளையும், அதன் மீது மற்றொரு காளையும் விழுந்தன. இதில் முதலில் விழுந்த காளை படுகாயமடைந்த பரிதாபமாக உயிரிழந்தது. மற்றொரு காளையை அப்பகுதியை சேர்ந்தவர்கள் உயிருடன் மீட்டனர். திருப்புத்தூர் அருகே கிணற்றில் விழுந்த மஞ்சுவிரட்டு காளையை மீட்கும் மக்கள்.

Tags : Tragedy ,Thiruputhur , Tragedy , Thiruputhur, killed
× RELATED பேருந்து – கார் மோதி விபத்து; 3 பேர் பலி 28 வீரர்கள் காயம்: ம.பி.யில் சோகம்