சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அர்ச்சகளிடையே மோதல் ஏற்பட்டால் காவல்துறையிடம் புகார் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் செயல் அலுவலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் கோயிலில் வடகலை, தென்கலை தொடர்பாக அர்ச்சகர்களிடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. அர்ச்சகர்கள் மோதிக்கொள்வதால் பூஜைகள், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி ரங்கநாதன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.