டெல்லி: வடகிழக்கு டெல்லியில் வன்முறை சம்பவங்களுக்குப் பின்னர் கஜூரி காஸ் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த டெல்லியில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். இன்று ஜஃப்ராபாத்தில் நடந்த வன்முறை போராட்டத்தின் போது காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் குரு தேக் பகதூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.