×

தருமபுரி அருகே ஆத்துகாரன்பட்டியில் 3வது நாளாக அருந்ததியின மக்கள் குடியேற்றுப் போராட்டம்

தருமபுரி: தருமபுரி அருகே ஆத்துகாரன்பட்டியில் 3வது நாளாக அருந்ததியின மக்கள் குடியேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை அளந்து தராமல் அரசு ஊழியர்கள் அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். பட்டா வழங்கியும் நிலம் பிரித்துக் கொடுக்கப்படாமல் உள்ளதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் குடியேறியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கோரி 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : Arundhatiyani ,Attukkaranpatti ,Darumapuri ,Arundhatiya , Dharmapuri, Attukarnapatti, Arundhatiya people, the immigration struggle
× RELATED டெங்கு காய்ச்சலுக்காக தருமபுரி அரசு...