×

மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு எம்.பி.. எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றம்

மதுரை: மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு எம்.பி.. எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் 2013ல் நடந்த பொதுக்கூட்டத்தில் அரசை விமர்சித்து பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவதூறு வழக்குக்கு தடை கேட்டு மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஸ்டாலின் மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.


Tags : Stalin ,Migration ,MLA ,session ,Special Session of MLAs ,hearing cases , MK Stalin, defamation case, special session, Madurai branch of High Court
× RELATED 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி...