சென்னை: பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வருகை புரியும் அரசு விருந்தினர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் தங்குவதற்கு ஏதுவாக, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள புதிய அரசு விருந்தினர் இல்லத்தில் புதிதாக 10 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூடம் ஒன்று அமைக்கப்படும் என்று கடந்த 2019-20ம் ஆண்டு பொதுத் துறை மானிய கோரிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள புதிய அரசு விருந்தினர் இல்லத்தில் பல்வேறு உடற்பயிற்சி உபகரணங்களுடன் 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்.