பெங்களூரு: நித்தியானந்தா மீதான பாலியல் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நித்தியானந்தா மீதான பாலியல் வழக்கு ராம்நகர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், லெனின் கருப்பன் வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.