×

தமிழகம் முழுவதும் புதிதாக 120 பணியிடங்கள்: மின்வாரியம் திட்டம்

சென்னை: பல்வேறு இடங்களில் புதிதாக 120 பணியிடங்களை உருவாக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின்வாரியத்தில் ஏற்படும் கூடுதல் பணிச்சுமையை பொறுத்து பணியிடங்கள் அதிகரிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் வகுப்பு 3, 4 பிரிவுகளில் 120 பணியிடங்களை புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தபணியிடங்கள் ஈரோடு, கிருஷ்ணகிரி-பயனபள்ளி, கிருஷ்ணகிரி-தொரபள்ளி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெருங்களத்தூர், வந்தவாசி, ஒன்னுபுரம், ஆரியபடி, சோமசிபடி ஆகிய இடங்களில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : workplaces ,Tamil Nadu , 120 workplaces, electricity scheme throughout Tamil Nadu
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...