சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டமானது நடைபெற்று வருகிறது. மதுரையில் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் சட்டம் ஒழுங்கை பேணி காக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என காவல் ஆணையர் வலியுறுத்தி வருகின்றனர்.