முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் மில்லடி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மாலை இரைதேடி அங்குமிங்குமாக பறந்த பெண் மயில் அப்பகுதியை கடந்த அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு அங்கேயே இறந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் இறந்த மயிலை மீட்டு அதேபகுதியில் குழிதோண்டி புதைத்தனர்.