×

மகளின் மருத்துவ கவுசலிங்கை முடித்து சென்றபோது மரத்தில் கார் மோதி தம்பதி-மகன் பலி

சின்னசேலம்: தேனி மாவட்டம் போடியில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தவர் சவுந்திரராஜன் (46). இவரது மனைவி பிரியா (43). இவர்களுக்கு யஷ்வந்தினி(18) என்ற மகளும், அபிஷேக் கிரித்திக்(16) என்ற மகனும் உள்ளனர். யஷ்வந்தினிக்கு கடந்த 8ம் தேதி சென்னையில் கவுன்சலிங் கில் நாமக்கல்லில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதையடுத்து, 8-ந்தேதி இரவில், சென்னையில் இருந்து நாமக்கல் புறப்பட்டனர். காரை சவுந்திரராஜன் ஓட்டினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனார்பாளையம் அருகே தத்தாதிரிபுரம் பகுதியில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் பிரியா, அபிஷேக் கிரித்திக், சவுந்திரராஜன் உயிரிழந்தனர். படுகாயமடைந்த யஷ்வந்தினி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். …

The post மகளின் மருத்துவ கவுசலிங்கை முடித்து சென்றபோது மரத்தில் கார் மோதி தம்பதி-மகன் பலி appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,Soundrarajan ,Tasmac ,Bodi, Theni district ,Priya ,
× RELATED கிணற்றில் தவறி விழுந்த வாலிபருக்கு கை முறிவு