×

‘அழைத்தால் இணைப்பு’ திட்டத்தில் கொளத்தூரில் 150 வீட்டுக்கு புதிதாக கழிவுநீர் இணைப்பு

பெரம்பூர்: சென்னை குடிநீர் வாரியத்தின் “அழைத்தால் இணைப்பு” மற்றும் “இல்லம்தோறும் இணைப்பு” என்ற புதிய திட்டத்தின் கீழ் கழிவுநீர் இணைப்பு தேவைப்படும் நபர்கள் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டால் அவர்களது வீடுகளுக்கு 3 அல்லது 4 நாட்களில் இணைப்பு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பு கொடுக்கப்பட்ட பின்னர் ஆவணங்களை காண்பித்தால் போதுமானது. மேலும், குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் கட்ட வேண்டிய தொகையை தவணை முறையில் பிரித்து கட்டும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் அதிகப்படியான மக்கள் கழிவுநீர் இணைப்பு பெற்று வருகின்றனர்.

பெரம்பூரில் உள்ள பகுதி-6 அலுவலகத்தில் 15 டிவிசன்கள் உள்ளன. இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரையில் சுமார் 325 வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் மட்டும் 150க்கும் மேற்பட்டவர்களுக்கு கழிவுநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்த திட்டத்தின் மூலம் இடைத்தரகர்கள் இன்றி பொதுமக்கள் எளிய முறையில் இந்த வசதியை பெற்று வருவதாகவும் தொடர்ந்து அதிக அளவில் அழைப்புக்கள் வருவதால் விரைவில் அவர்களுக்கும் புதிய இணைப்புகள் கொடுக்கப்படும் எனவும் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : households ,Kolathur , Kolathur, sewer line
× RELATED நாவலூர் கிராமத்தில் ஓராண்டிற்கு...