×

பெண் கொலையில் துப்பு துலங்கியது உல்லாசமாக இருக்க அதிக பணம் கேட்டதால் அடித்துக்கொலை செய்தேன்: கைதான சிறுவன் பரபரப்பு வாக்குமூலம்

விழுப்புரம்:  விழுப்புரம் தெற்கு ரயில்வே காலனி குடியிருப்பு பகுதியில் பாழடைந்த நிலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதனிடையே கடந்த 14ம் தேதி இரவு அப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் இளம்பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக இறந்து கிடந்ததை அவ்வழியாக சென்றவர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக நகர காவல் நிலையத்திலும், ரயில்வே இருப்புபாதை போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.  இதுகுறித்து நகர காவல்நிலையத்தில் கொலை வழக்குபதிந்து தேடுதல்வேட்டை நடத்தி வந்தனர். ரயில்நிலையத்தை சுற்றியுள்ளவர்கள் தான் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதினர். இதனிடையே, 17 வயது சிறுவன்தான் தனியொருவனாக இருந்து இக்கொலையை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

நேற்று அவரை பிடித்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளான். பின்னர், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அவன் கூறியதாவது:  நான் ரயில்நிலைய கேண்டீனில் வேலைசெய்து வருகிறேன். ரயில்நிலைய பிளாட்பாரத்தில் பிச்சை எடுக்கும் 35 வயது பெண் ஒருவர் தங்கியிருப்பார். இரவுநேரத்தில் பணம்கொடுத்து அவரை சிலர் உல்லாசத்திற்கு அழைத்து செல்வார்கள். அதைப்போலவே நானும், அப்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று நினைத்தேன். அப்பெண்ணிடம் சென்று பணத்தை காண்பித்து, பாழடைந்த ரயில்வே குடியிருப்புக்கு அழைத்துச் சென்றேன். பின்னர், ஆடைகளை அவிழ்த்தநிலையில் பணத்தை கேட்டார். என்னிடமிருந்த 50 ரூபாயை எடுத்துக்கொடுத்தேன்.

ஆனால் வாங்கமறுத்து ரூ.500 கொடுக்கவேண்டுமென கூறி சண்டைபோட்டார். இவ்வளவு பணம் என்னிடமில்லை என்று கூறினேன். பணம் கொடுக்காததால் உல்லாசத்திற்கு மறுத்தார். மேலும், என்னை பார்த்து, நீ சிறுவன் உன் பெற்றோரிடமும், போலீசாரிடமும் தெரிவித்து விடுவேன் என்று அச்சுறுத்தினார். இதனால் பயந்துபோய் அருகிலிருந்த கல்லைஎடுத்து முகத்தில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் அச்சிறுவனை கைதுசெய்து, சிறுவர்சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

Tags : arrest boy , Kill the girl. Pleasure, money, slaughter, arrest boy
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கு நயினார்...