சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு தேர்வு எழுதிய 10 பேரின் புகைப்படங்களை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டனர். தமிழ்நாடு மாணவர்களுக்கு பதிலாக அவர்களின் ஹால் டிக்கெட்டில் புகைப்படத்தை மாற்றி தேர்வு எழுதியவர்கள், புகைப்படங்களில் இருப்பவர்களின் முகவரி மற்றும் விவரங்களை பொதுமக்கள் தங்களிடம் பகிரலாம் என்று சிபிசிஐடி போலீசார் அறிவித்தனர்.