×

ரூ.2 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சிவகங்கை: சிவகங்கை நாச்சியார்புரம் தனியார் ஆலையில் ரூ.2 கோடி இயந்திரங்கள் திருடு போன வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. காவல்துறையினர் முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது உயர்நீதிமன்ற கிளை. கடந்த 2018 நவம்பர் 24ல் ஆலையில் ஆய்வு செய்த போது ரூ.2 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் கொள்ளை போனது என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இதுவரை இயந்திரங்கள் மீட்கப்படவில்லை. வழக்கை காவல்துறை விசாரிக்க தடை விதிக்கவும், சிபிசிஐடிக்கு மாற்றக்கோரியும் சிதம்பரம் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Tags : Theft
× RELATED தகாத உறவு விவகாரத்தில் இளம்பெண்...