×

விசாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து கடத்தி வந்து ரயில்வே குடியிருப்பில் அடைத்து மனநோயாளி சிறுமி பலாத்காரம்: ரயில்வே ஊழியர் கைது: திருவொற்றியூரில் பரபரப்பு

திருவொற்றியூர்: விசாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் சுற்றிய மனநோயாளி சிறுமியை சென்னை, திருவொற்றியூருக்கு கடத்தி வந்து ரயில்வே குடியிருப்புக்குள் அடைத்து பலாத்காரம் செய்த ஊழியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை  சேர்ந்தவர் லட்சுமி இவரது பேத்தி 17 வயது சிறுமி. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள சாய்பாபா கோயிலுக்கு பாட்டியுடன் சென்றபோது சிறுமி மாயமானார். இதுகுறித்து, விசாகப்பட்டினம் எம்.வி.எம் காவல் நிலையத்தில் லட்சுமி புகாரளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமி குறித்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுமியை போலீசார் அழைத்து விசாரணை செய்தபோது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சங்கர் ராவ் (48). தென்னக ரயில்வேயில் பணிநீக்கம் செய்யப்பட்ட   ஊழியர். கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி மாலை விசாகப்பட்டினம் தொண்டபதி காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் சென்றுள்ளார். அப்போது, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் நின்று கொண்டிருந்த சிறுமியிடம் நைசாக பேசி  சென்னை திருவொற்றியூரில் உள்ள ரயில்வே குடியிருப்புக்கு சங்கர் ராவ் அழைத்து வந்துள்ளார். பின்னர், ரயில்வே குடியிருப்பில் தங்க வைத்து பலமுறை சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி 4 மாத  கர்ப்பிணியானார். இந்நிலையில் சங்கர் ராவ்விடம் இருந்து தப்பிய சிறுமி சென்ட்ரலில் சுற்றித்திரிந்தபோது மீட்கப்பட்டார்.  இதையடுத்து  ரயில்வே போலீசார் சிறுமியை பெரவள்ளூரில் உள்ள  குழந்தைகள் காப்பகத்தில்  ஒப்படைத்தனர். பின்னர் சிறுமியின் பாட்டி லட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் ரயில்வே குடியிருப்பில் பதுங்கியிருந்த முன்னாள் ஊழியர் சங்கர்ராவை திருவொற்றியூர் மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : bus station ,Visakhapatnam ,railway employee ,rapist , Visakhapatnam, mentally ill girl, rapist, railway employee, arrested
× RELATED சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை...