×

கையெழுத்து இயக்கம் நிறைவு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் கிழக்கு பகுதி திமுக சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி  நடைபெற்ற கையெழுத்து இயக்கம் திருவொற்றியூர் சன்னதி தெருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நிறைவடைந்தது. பகுதி செயலாளர் தி.மு.தனியரசு தலைமை வகித்தார். நிகழ்ச்சியின்போது குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வீதி வீதியாக சென்று வியாபாரிகள், பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர். இதில் பொதுமக்களும் ஆர்வத்துடன் கையெழுத்து போட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் ஆசைதம்பி, ஆதிகுருசாமி, சைலஸ், பத்மநாபன், ஆர்.எஸ். சம்பத், நித்யாதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Signature, Movement, Completion
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...