ஈரோடு: தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை அளிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். முன்னதாக, தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என முதல்வரை சந்தித்த சீமான் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.