சென்னை: ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (52). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், அடையாரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார் நோயின் தன்மை அதிகமானதால் மனமுடைந்த இவர், நேற்று முன்தினம் மருத்துவமனை வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த கோட்டூர்புரம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.