சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் நடந்த கலாச்சார நிகழ்ச்சிக்கு வந்த மாணவி மீது மர்மநபர் தாக்குதல் நடத்தியுள்ளார். கலாச்சார நிகழ்ச்சிக்கு வந்த கல்லூரி மாணவியிடம் பெயர் கேட்பது போல் நடித்து தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் மர்மநபர் தப்பினார். கல்லூரி வாயில் முன் நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை நடத்துகிறது.