×

2016ம் ஆண்டு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றது அம்பலம்

விழுப்புரம்: 2016ம் ஆண்டு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றது அம்பலமாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஆரியூர் கிராம நிர்வாக அலுவலர் நாராயணன் 2016ல் ரூ.3.5 லட்சம் செலுத்தி தேர்ச்சி பெற்றதாக சிபிசிஐடி வழக்கு தொடர்ந்துள்ளது. நாராயணன், காவலர் பூபதி மூலம் 5 பேரிடம் ரூ.34 லட்சத்தை பெற்று இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் கொடுத்து தேர்ச்சி பெற உதவியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டிலும் தனது மனைவி உட்பட 7 பேரிடம் ரூ.73 லட்சம் பெற்று ஜெயக்குமாரிடம் கொடுத்து தேர்ச்சி பெற உதவியுள்ளார் நாராயணன்.

Tags : Grama Niladhari Examination ,tnpsc , tnpsc
× RELATED குரூப் 2ஏ பதவிக்கான சான்றிதழ்...