×

தேர்வர்களின் கைரேகை பெறப்பட்டு ஆதாருடன் ஒப்பிட்ட பிறகே இனி தேர்வெழுத அனுமதி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை :ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதை தடுக்க ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது.  டிஎன்பிஎஸ்சி  தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அம்பலமான நிலையில் புதிய மாற்றங்களை தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வர்களின் விரல் ரேகை, ஆதார் தகவலோடு ஒப்பிட்டு மெய்த்தன்மை சரிபார்க்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி  தெரிவித்துள்ளது.

தேர்வு எழுதும் நபர்களின் விவரம் முழுமையாக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வர்கள் உரிய கட்டணம் செலுத்தி விடைத்தாள் நகல்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மையங்களை தேர்வாணையமே இனி தேர்வு செய்யும். டிஎன்பிஎஸ்சிக்கு விண்ணப்பிக்க இனி ஆதார் கட்டாயம் - ஆதாரோடு ஒப்பிட்ட பிறகு தேர்வர் இனி தேர்வெழுத அனுமதி வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

முறைகேடுகள் இருப்பின் முன்கூட்டியே கண்டறியும் உயர் தொழில்நுட்பத் தீர்வு நடைமுறைப்படுத்தப்படும். தேர்வர்களின் கைரேகை பெறப்பட்டு ஆதாருடன் ஒப்பிட்ட பிறகே இனி தேர்வெழுத அனுமதி வழங்கப்படும் என்று புதிய கட்டுப்பாடுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் விதித்துள்ளது.

Tags : selectors ,tnpsc , tnpsc
× RELATED மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி...